March 3, 2026

ஸ்டாலின் சார் கொடுத்த ரூ. 5000 பணத்தால் எல்லாருக்கும் பைத்தியம் பிடிச்சுருச்சு.. பிச்சைன்னு எப்படி சொல்லலாம்.. ரோஜா கேள்வி

ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். அப்போது தமிழ்நாட்டில் வழங்கப்படும் கலைஞர் உரிமைத்தொகையை பாராட்டி பேசியுள்ளார். அதே நேரம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பணம் தருவதாக சொல்லிவிட்டு, ஒரு பைசா கூட கொடுக்கவில்லை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ரோஜா.

ரோஜா
நடிகை ரோஜா

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு என திமுக பம்பரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை துறைமுகம் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா பங்கேற்று பேசினார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் சொன்ன மாதிரியே மாதந்தோறும் ரூ. 1000 வழங்கி வருகிறார். அதே நேரம் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ரூ. 1500 தருவதாக கூறி, எதுவுமே தரவில்லை என கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

Flexi Cap Funds help your money grow while staying ahead of inflation.HDFC Mutual Fundஇது தொடர்பாக ரோஜா பேசுகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் ரூ. 1000 கொடுக்கிறேன் சொல்லி இருக்காங்க. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவும் சொன்னாங்க. 18 வயதை தாண்டியவர்கள் வீட்ல எத்தனை பேர் இருந்தாலும் ரூ. 1500 தர்றேன் சொன்னாங்க. இரண்டு வருஷம் ஆகுது. இதுவரை ஒரு பைசா கூட கொடுக்கலை. ஆனால், உங்க சிஎம் சொன்னபடியே வீட்ல இருக்க குடும்ப தலைவிக்கு கரெக்டாக ஆயிரம் போய் சேருது. எனவே தலைவர் என்றால் ஒரு வார்த்தை சொன்னால், முதலமைச்சர் ஆனதும் செய்ய வேண்டியதை செஞ்சுக்கிட்டே போகனும்.

மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய விஷயம்

பணக்காரங்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொம்ப கம்மியாக தோன்றும். ஆனால் மிடில் கிளாஸுக்கு ஆயிரம் ரூபாய் பெரிய விஷயம். ஏனென்றால் நானும் அப்படி இருந்து வந்திருக்கேன். எனவே எனக்கு தெரியும். ஊர்ல இருக்கவங்க, மிடில் கிளாஸ் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைத்தால் அவுங்க அந்த வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவாங்க. அதுனால ஒரு பெண் எப்போதும் பணத்துக்காக கணவன், மகனை சாராமல் தன்னோட கைல ஒரு ஆயிரம் இருந்தால் நம்பிக்கை வேறலெவல்ல இருக்கும்.

விஜய்க்கு எதிராக போட்டியா.. அவரே நிறைய மனஉளைச்சல்ல இருப்பார்.. கருணாஸ் பேச்சு

எனவே ஸ்டாலின் சார் உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது கேள்விபடும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் இப்போ தேர்தல் வரும்போது எல்லாரும் அந்த பணத்தை எப்படியாவது நிப்பாட்டுவதற்கு நினைச்சாங்க. அவர் எல்லாமே சேர்த்து ஒரே தடவையாக ரூ. 5000 கொடுத்துட்டாங்க. அதுல எல்லாருக்கு பைத்தியம் வந்துருச்சு. அதுனா என்ன சொல்றாங்க இவுங்க காசு கொடுத்து சோம்பேறி ஆக்குறாங்கன்னு சொல்றாங்க.

சிஎம் சொன்னதை செய்தார்

அவுங்களை இங்க இருந்து நேர்ல கேள்வி கேட்கிறேன். சிஎம் ஒரு நல்லது செஞ்சாரு. அதை எப்படி பிச்சை போடுறாரு, சோம்பேறி ஆக்குறாருன்னு சொல்றீங்க? ஏன்னா கார்ப்பரேட் கம்பெனிகள் ஆயிரம், லட்சம் கோடின்னு கடன் வாங்குவாங்க. அதை திருப்பி கொடுக்காமல் ஏமாத்துவாங்க. அரசாங்கமே அதை தள்ளுபடி பண்ணுவாங்க. அப்போ யாருமே இதைப்பற்றி பேச மாட்டங்க. ஆனால் ஏழைகளுக்கு ஆயிரம் கொடுக்கும்போது மட்டும் எல்லாரும் பொத்துட்டு வருவாங்க.

உடனே அதை பெருசா பேசுவாங்க. அதுதான் எனக்கு பிடிக்காத விஷயம். அடுத்து வரும்போது இரண்டாயிரம் தர்றேன் சொல்லி இருக்காங்க. அது இந்த சமூகத்துக்கு உதவியாக இருக்கும். எழைகளுக்கு கொடுக்கிற பணம் மக்களுக்கு உதவுவதுடன், அரசுக்கு வரும். எனவே அதனை ஆதரிங்க. தவறாக பேசாதீங்க. இவ்வாறு கலைஞர் உரிமைத்தொகையை பாராட்டி பேசியுள்ளார் ரோஜா. அவருடைய இந்த பேச்சு தற்போது பெரியளவில் கவனம் ஈர்த்து வருகிறது.

Spread the love