திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 74,471 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 31,319 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் ரூ.4.68 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 4.09 பேருக்கு லட்டு விநியோகிக்கப்பட்டது. 2.59 பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் சுமார் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

More Stories
ராகுல் காந்தி ஒரே ஒரு வார்த்தை கூறினால் நாங்கள் என்டிஏ கூட்டணியிலிருந்து விலகுகிறோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி
23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன திருச்சுழி இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு!
“காவிரியில் நீர் திறக்க மறுப்பது கர்நாடக அரசின் தமிழர் விரோதப் போக்கு” – திருமாவளவன்