May 18, 2026

300 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்தில் இருந்து தாயகம் திரும்பிய ஆனைமங்கலம் செப்பேடுகள்

நாகப்பட்டினம்/கும்பகோணம்: ​ராஜேந்​திர சோழன் காலத்​திய ஆனைமங்​கலம் செப்​பேடு​கள் சுமார் 300 ஆண்​டு​களுக்​குப் பிறகு நெதர்​லாந்​தில் இருந்து பிரதமர் மோடி மூல​மாக இந்​தியா திரும்​பி​யுள்​ளது.

மாமன்​னன் ராஜ​ராஜ சோழனின் 21-வது ஆட்​சி​யாண்​டில், கி.பி.1005-ல் நாகப்​பட்​டினத்​தில் விஜய கிடாரத்து அரசன் மாறவிஜயோத்​துங்க வர்​ம​னால் கட்​டப்​பட்ட ‘சூளாமணி வர்ம விகாரம்’ என்ற புத்த விகாரத்​துக்கு 97 வேலி பரப்பு கொண்ட ஆனைமங்​கலம் கிராமத்தை ராஜ​ராஜ சோழன் பள்​ளிச்​சந்​த​மாக வாய்​மொழி​யாக தானம் வழங்​கி​னார்.

ராஜ​ராஜன் 1014-ல் உயி​ரிழக்​கும் வரை இச்​சாசனம் உரு​வாக​வில்​லை. அவரது மகன் முதலாம் ராஜேந்​திர சோழன் இதை எழுத்​துப்​பூர்​வ​மாக பட்​ட​யம் வெட்டி உறுதி செய்​தார். 30 கிலோ எடை கொண்ட 21 செப்​பேடு​கள், ஒரு வெண்கல வளை​யத்​தால் பிணைக்​கப்​பட்​டுள்​ளன. வளை​யத்​தில் சோழ அரச முத்​திரை உள்​ளது. 5 ஏடு​கள் வடமொழி​யிலும், 16 ஏடு​கள் தமிழிலும் உள்​ளன.

குலோத்​துங்க சோழன் உறுதி செய்த 3 சிறிய ஏடு​களும் இணைக்​கப்​பட்​டுள்​ளன. சைவ சமயத்தை சார்ந்த ராஜ​ராஜ சோழன், ஒரு புத்த விகாரத்​துக்கு ஊரையே தானம் செய்​தது தமிழ் மன்​னர்​களின் சமய பொறையை காட்​டு​கிறது. தமிழ் ஏடு​கள் அன்​றைய நிர்​வாக சொல்​லாடல், நில அளவை முறை, சட்​டப்​பூர்வ ஆவண மரபை பதிவு செய்​கின்​றன. 11-ம் நூற்​றாண்​டின் சர்​வ​தேச வர்த்​தகம், பவுத்த- சைவ நல்​லிணக்​கம், சோழர்​களின் நிர்​வாகத் திறன், கடல்​கடந்த ராஜதந்​திர உறவுக்கு இது சான்​றாக விளங்​கு​கிறது. சோழர் அரசர் பட்​டியல்,அதி​காரி​கள் பட்​டியல், வென்ற நாடு​கள் குறிப்​பும் உள்​ளது.

18-ம் நூற்​றாண்டு டச்சு ஆதிக்​கத்​தின்​போது ஃப்​ளோரன்​சி​யஸ் கேம்​பர் என்​பவ​ரால் நாகையி​லிருந்து இந்த செப்​பேடு​கள் நெதர்​லாந்து எடுத்​துச் செல்​லப்​பட்​டன. ஹமேக்​கர் குடும்​பத்​தினர் வசம் இருந்​து, 1862-ல் லெய்​டன் பல்​கலைக்​கழக அருங்​காட்​சி​யத்​துக்கு நன்​கொடை​யாக வழங்​கப்​பட்​டன. இவற்றை மீட்டு தமிழகத்​துக்கு கொண்​டுவர வேண்​டும் என்று ஏராள​மான தமிழ் ஆர்​வலர்​கள் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.

இந்​நிலை​யில்​தான் நெதர்​லாந்து அரசு தற்​போது பிரதமர் மோடி​யிடம் அவற்றை நேரடியாக வழங்கி உள்​ளது. இவற்றை கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் பொது​மக்​கள் பார்​வைக்கு நிரந்​தரமாகக் காட்​சிப்​படுத்த வேண்​டும் என கங்​கை​கொண்ட சோழபுரம் மேம்​பாட்​டுக்​குழும தலை​வர் ஆர்​.கோமகன் வலியுறுத்தியுள்ளார்.

ஆனைமங்​கலம் செப்​பேடு​கள் ஆயிரம் ஆண்​டு​களுக்கு முந்​தைய தமிழனின் கொடைத்​திறன், மதநல்​லிணக்​கம், நிர்​வாக நேர்​மை, சர்​வ​தேச பார்வை ஆகிய​வற்றை பேசும் காலக்​கண்ணாடி​யாக உள்​ளது. அதை கங்​கை​கொண்ட சோழபுரத்​தில் காட்​சிப்​படுத்​த வேண்டும் என்பது தமிழ் ஆர்​வலர்​களின் கோரிக்​கை​யாக உள்​ளது.

வைகோ வலியுறுத்தல்: இதனிடையே ஆனைமங்​கலம் செப்​பேடு​களை நாகப்​பட்​டினத்​தில் பாது​காப்​புடன் காட்​சிப்படுத்த மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ வலி​யுறுத்​தி​யுள்​ளார். மேலும் இந்​தச் செப்​பேடு​களை வெறும் நிர்​வாக ஆவணங்​களாகக் கருத​வில்​லை. மத்​தி​ய​கால தென்​னிந்​தி​யா​வில் தமிழ்​நாட்​டின் பன்​முகப் பண்​பாடு மற்​றும் வணி​கத் தொடர்​பு​கள் நிறைந்த உலகின் முக்​கிய தடயங்​களாக திகழ்​கின்​றன.

பல ஆண்டு கால தூதரக முயற்​சிகளுக்கு பிறகு நெதர்​லாந்து அரசு, இந்​தி​யா​விடம் அதி​காரப்​பூர்​வ​மாக ஒப்​படைத்​துள்​ளது. இவற்றை நாகப்​பட்​டினம் அருங்​காட்​சி​யகத்​தில் பாது​காப்​பாக வைத்து பொது மக்​களுக்கு காட்​சிப்​படுத்த மத்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்​டும் என அறிக்கையொன்றில் வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

Spread the love