April 25, 2026

92 சதவீத வாக்குப் பதிவுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு

புதுடெல்லி: மேற்கு வங்க முதல் கட்ட தேர்​தலில் 92 சதவீத வாக்குகள் பதிவானது மகிழ்ச்சி அளிக்கிறது என உச்​ச நீ​தி​மன்​றம் பாராட்டு தெரி​வித்​துள்​ளது.

மேற்கு வங்​கத்​தில் நடத்​தப்​படும் எஸ்​.ஐ.ஆர் பணி​களுக்கு எதி​ராக தாக்​கல் செய்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு விசா​ரித்​தது.

அப்​போது, மனு​தா​ரர்​கள் சார்​பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கல்​யாண் பானர்​ஜி கூறும்போது, ‘‘மேற்குவங்கத்தில் வியாழக்​கிழமை நடை​பெற்ற தேர்​தலில் 92 சதவீதம் வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளது. புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் பெரு​மள​வில் வாக்களித்துள்​ளனர்.

இருப்​பினும் எஸ்​ஐஆரின் போது பெயர் நீக்​கம் செய்​யப்​பட்ட 27 லட்​சம் பேரின் மேல்​முறை​யீடு மனுக்​களில் 136 மனுக்​கள் மட்​டுமே தீர்ப்​பா​யத்​தால் முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது’’ என்று வாதிட்​டார்.

அப்​போது, இந்​திய குடிமக​னாக மேற்கு வங்​கத்​தில் பதி​வான வாக்கு சதவீதத்தை கேட்டு மகிழ்ச்சி அடைவ​தாக​வும், மக்​கள் வாக்​குரிமையை செலுத்​தும் போது​தான் ஜனநாயக கட்​டமைப்பு வலுப்​படு​வ​தாக​வும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் பெரு​மிதம் தெரி​வித்​தார். வன்​முறையற்ற தேர்​தலாக இருந்​தது என மற்​றொரு நீதிபதி ஜோய்​மால்யா பாக்சி குறிப்​பிட்​டார்.

கூடு​தல் அவகாசம்​: மேலும் இந்த விவ​காரம் தொடர்​பாக கொல்​கத்தா உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தியை நாட​வும் நீதிப​தி​கள் அறி​வுறுத்​தினர். மால்​டா​வில் மாவட்ட நீதிப​தி​களை சிறைப்​பிடித்த விவ​காரத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய அந்த விவ​காரத்தை விசா​ரித்து வரும் தேசிய புல​னாய்வு அமைப்​புக்கு கூடு​தல் அவகாசம்​ அளித்​தும் நீதிபதிகள்​ உத்​தர​விட்​டனர்​.

Spread the love