September 4, 2026

பழனியில் 108 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது

 பழனி ஜூலை 13

 பழனி நகராட்சி சார்பில், பழனி டவுன் பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய் களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி ஆணையர் பொறுப்பு பிரேட் ஆனந்த் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் கால்நடை டாக்டர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவினர்கள், நகரில் சுற்றித்திரிந்த 108 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். மேலும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக கூறினர்.

Spread the love