சென்னை: பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆடி மாதம் தொடங்க இருப்பதால், ஜூலை 16-ம் தேதி வியாழக்கிழமை கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்க பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, அன்றைய தினம் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 டோக்கன்கள் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 300 டோக்கன்கள், அதிகளவில் ஆவணபதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

More Stories
‘ஃப்ரிட்ஜ் வாங்க கூப்பன்’ – சி.விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஓசூர் அத்திப்பள்ளியில் பேருந்துகள் நிறுத்தம்: தமிழக – கர்நாடகா எல்லையில் போலீசார் குவிப்பு
சட்டசபையில அப்பாவை தேடுறீங்க.. பெற்ற அப்பாவா? வளர்த்த அப்பாவா? விஜய்யை வம்புக்கு இழுத்த ஆர்.பி.உதயகுமார்!