February 7, 2026

தைப்பூச திருவிழா: திருத்தணி முருகன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தைப்பூசத்தை முன்னிட்டு, முருகனின் அறுபடை வீடுகளில், 5-ம் படை வீடான திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். (உள்படம்) காவடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் சண்முகர்.

திருவள்ளூர்: தைப்​பூசத்தை முன்​னிட்​டு, திருத்தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் நேற்று லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திரண்​டு, நீண்ட வரிசை​யில் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், திருத்தணியில் அமைந்​துள்ள சுப்​பிரமணிய சுவாமி கோயில், முரு​க​னின் அறு​படை வீடு​களில், 5-ம் படை வீடாக விளங்​கு​கிறது.

இக்​கோயி​லில், தைப்​பூசத்தை முன்​னிட்​டு, நேற்று அதி​காலை 3 மணி​யள​வில், மூல​வ​ரான சுப்​பிரமணிய சுவாமிக்​கு, பால், பன்​னீர், தேன் உள்​ளிட்ட பொருட்​களால் சிறப்பு அபிஷேகம் நடை​பெற்​றது.

தொடர்ந்​து, சுப்​பிரமணிய சுவாமிக்கு வெண்​ணிற பட்டு அணிவிக்​கப்​பட்டு தீபா​ராதனை நடை​பெற்​றது. அதே​போல், காலை 9 மணி​யள​வில் காவடி மண்​டபத்​தில் உற்​சவர் சண்​முகருக்கு பால் அபிஷேகம் மற்​றும் சிறப்பு அலங்​காரம் நடை​பெற்​றது. பிறகு, மாலை குதிரை வாக​னத்​தில் சுப்​பிரமணிய சுவாமி பிர​கார உலா சென்று பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

தைப்​பூசத்தை முன்​னிட்​டு, நேற்று அதி​காலை 3 மணி முதல் நேற்று இரவு வரை, திரு​வள்​ளூர், அரக்​கோணம் உள்​ளிட்ட தமிழக பகு​தி​கள் மட்​டுமல்​லாமல், ஆந்​தி​ரா, புதுச்​சேரி உள்​ளிட்ட பிற மாநிலங்​களை சேர்ந்த லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் திருத்தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் திரண்​டு, நீண்ட வரிசை​யில் 5 மணி நேரத்​துக்கு மேல் காத்​திருந்து சுவாமி தரிசனம் செய்​தனர்.

Read More

இதில், சென்​னை, காஞ்​சிபுரம், வேலூர் உள்​ளிட்ட பகு​தி​களில் இருந்து ஏராள​மான பக்​தர்​கள் பாதை யாத்​திரை​யாக திருத்தணிக்கு வந்​து, சுப்​பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், நூற்​றுக்​கணக்​கான பக்​தர்​கள் பால் காவடி, பன்​னீர் காவடி, மலர் காவடி, மயில் காவடி உள்​ளிட்ட காவடிகளை சுமந்து வந்​து, சுப்​பிரமணிய சுவாமியை வணங்​கினர்.

இலவச பேருந்​துகள் இயக்​கம்: வழக்​கத்​தை​விட மிக அதி​கள​வில் பக்​தர்​கள் திருத்தணி சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் திரண்​டதால், கோயிலுக்கு செல்​லும் மலை பாதை​யில் கார், வேன், இரு சக்கர வாக​னங்​களுக்கு தடை விதிக்​கப்​பட்​டது. அதே நேரத்​தில், பக்​தர்​கள் மலை பாதை வழி​யாக எளி​தாக கோயிலுக்கு செல்​லும் வகை​யில், கோயில் நிர்​வாகம் சார்​பில் 15 இலவச பேருந்​துகள் இயக்​கப்​பட்​டன.

தைப்​பூசத்தை முன்​னிட்​டு, திருத்தணியில், சுப்​பிரமணிய சுவாமி கோயில் உள்​ளிட்ட பகு​தி​களில் 300-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். பக்​தர்​களின் வசதிக்​காக அரக்​கோணத்​திலிருந்​து, திருத்தணிக்கு நேற்​று சிறப்​பு ரயில்​கள்​ இயக்​கப்​பட்​டன.

Spread the love