February 7, 2026

ஒட்டன்சத்திரத்தில்

பழனி பாதையாத்திரை பக்தர்களுக்கு 2 ஆம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விழா

ஒட்டன்சத்திரம் பிப்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகம் பிரிவு அருகில் சர்வேஷ் பல் மருத்துவமனை மற்றும் ஜெ.பி.எஸ் பத்திரம் எழுதும் நிறுவனம் சார்பில் பழனி பாதையாத்திரை செல்லும் பக்தர்களுக்கு 2 – வது ஆண்டாக அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. 

ஜெ.பி.எஸ் பத்திரம் எழுதும் நிறுவனம் ஜெ.பி.எஸ் சக்தீஸ்குமார், வி.பிரியதர்ஷினி சார்பாகவும், கள்ளிமந்தையம் ஜெ.பி.எஸ் செல்வராஜ் – சுப்புலட்சுமி குடும்பத்தார்கள் மற்றும் ஒட்டன்சத்திரம் சர்வேஸ் பல் மருத்துவமனை டாக்டர் எஸ்.அஸ்வினி, தென்னக இரயில்வே ஏ.இ. ஜெ.பி.எஸ் சரவணக்குமார் குடும்பத்தார்கள்;, மாஸ்டர்கள் எஸ்.சர்வேஸ், எஸ்.சர்வந்ஜெய் சார்பாகவும் பழனி பாதையாத்திரை பக்தர்கள் சுமார் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இவ்விழாவில் ஒட்டன்சத்திரம் நகர் மன்ற தலைவர் க.திருமலைசாமி, வெரியப்பூர் கருப்புச்சாமி, தங்கச்சியம்மாபட்டி ஆறுமுகம், சமூக ஆர்வலர்கள் ஆ.இளங்கோவன், எம்.விஜய்கார்த்திக், மதுரை மணி சே.சதீல்குமார், தமிழ்சுடர் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Spread the love