February 7, 2026

திருப்பதி ரதசப்தமி 2026…ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பெருமாளை தரிசிக்க வாய்ப்பு

திருப்பதியில் நடைபெறும் மிக முக்கியமான உற்சவங்களில் ஒன்றான ரத சப்தமி இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பான செய்யப்பட்டு வரும் நிலையில், ரத சப்தமியை முன்னிட்டு முக்கிய சேவைகள் பலவற்றையும் ரத்து செய்திருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

tirupati ratha saptami

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. ஜனவரி 17ம் தேதி 83,576 பேரும், ஜனவரி 18ம் தேதியன்று 84,058 பேரும், ஜனவரி 19ம் தேதி 79,098 பேரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த வாரம் வரை சாமி தரிசனத்திற்கு 12 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருந்த நிலையில், தற்போது சர்வ தரிசன வரிசையில் செல்பவர்களும் கூட 8 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் நிலையே உள்ளது.

இந்நிலையில் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு, ஜனவரி 25ம் தேதியன்று ரத சப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு மலையப்ப சுவாமி, ஏழு விதமான வாகனங்களில் மாட வீதிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருமலையில் நடைபெறும் மிக முக்கியமான உற்சவங்களில் ஒன்று ரத சப்தமி. வருடந்தோறும் ரதசப்தமி நாளில் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிவது உண்டு.

திருப்பதி ரதசப்தமி 2026…ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பெருமாளை தரிசிக்க வாய்ப்பு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கூட்டம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. ஜனவரி 17ம் தேதி 83,576 பேரும், ஜனவரி 18ம் தேதியன்று 84,058 பேரும், ஜனவரி 19ம் தேதி 79,098 பேரும் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த வாரம் வரை சாமி தரிசனத்திற்கு 12 முதல் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி இருந்த நிலையில், தற்போது சர்வ தரிசன வரிசையில் செல்பவர்களும் கூட 8 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ய முடியும் நிலையே உள்ளது.

இந்நிலையில் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு, ஜனவரி 25ம் தேதியன்று ரத சப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு மலையப்ப சுவாமி, ஏழு விதமான வாகனங்களில் மாட வீதிகளில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். திருமலையில் நடைபெறும் மிக முக்கியமான உற்சவங்களில் ஒன்று ரத சப்தமி. வருடந்தோறும் ரதசப்தமி நாளில் ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிவது உண்டு.

ரத சப்தமியை , மகா சப்தமி என்றும் அழைப்பது உண்டு. மகா மாதம் எனப்படும் தை மாதத்தில் வரும் வளர்பிறத சப்தமியில் ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. வேத சாஸ்திரங்களின் படி, இந்த நாளே சூரிய பகவான் அவதரித்த நாளாக கருதப்படுகிறது. ஞானத்திற்கு கடவுளாக போற்றப்படும் சூரிய பகவானின் அவதார தினம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள ரத சப்தமிக்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகிறது. மினி பிரம்மோற்சவம் என போற்றப்படும் ரத சப்தமி அன்று மலையப்ப சுவாமியை ஒரே நாளில் ஏழு விதமான வாகனங்களில் தரிசிக்க முடியும்.

Spread the love