சென்னை: முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் நடைபெற்றுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் முதல்வரின் புதிய அலுவலகம் அமைக்கப்படுகிறது. நாளிதழ் டெண்டர் அறிவிப்புக்கும் இ-டெண்டர் அறிவிப்புக்கு இடையே முரண்பாடு உள்ளது. பத்திரிகைகளில் டெண்டர் அறிவிப்பு வெளியான 4 நாளுக்கு பிறகே ஆன்லைனில் அது குறித்த அறிவிப்பு வெளியானது. ஆன்லைன் டெண்டரில் திட்ட மதிப்பீடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 13ம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெனியான நிலையில் ஆன்லைனில் 17ல் வெளியிடப்பட்டது.
முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்

More Stories
“அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன” – மாணிக்கம் தாகூர் விமர்சனம்
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கு விசாரணை: ஆக.21-க்கு ஒத்திவைத்தது புதுச்சேரி நீதிமன்றம்
வானிலை முன்னறிவிப்பு: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் கனமழை வாய்ப்பு