பெரியகுளம் எம்.எல்.ஏ நிதியில், மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தேவதானப்பட்டி பேரூராட்சி வடக்கு தெருவில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலையரங்கம், பள்ளிவாசல் தெருவில் 17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், டி.வி நகரில் 40 ரூபாய் லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டிடம், மஞ்சுளாறு பகுதியில் 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டிடம் ஆகியவற்றினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வின் போது, பெரியகுளம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் எல்.எம் பாண்டியன், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் திலகர், பேரூராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி ராமையா, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் குணா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் காக்கு நிபந்தன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்