நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் உட்கோட்டத்திற்குட்பட்ட ஒட்டன் மெத்தை பகுதியில், மல்லிகா என்பவர் தமது இரண்டரை பவுன் தங்கச் செயினை தவறவிட்டதாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், பள்ளிபாளையம் உட்கோட்ட காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை செய்தனர். தொடர்ந்து மேற்கொண்ட தீவிர தேடுதல் நடவடிக்கையின் மூலம், மல்லிகா அவர்கள் தவறவிட்ட இரண்டரை பவுன் தங்கச் செயினை கண்டுபிடித்து, தேவையான சரிபார்ப்புகளுக்குப் பிறகு பள்ளிபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கௌதம் அவர்கள் உரியவரிடம் ஒப்படைத்தார்.
காவல்துறையினரின் இந்த சிறப்பான மற்றும் துரிதமான நடவடிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சு. விமலா.இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
காவல்துறையின் இந்த செயற்பாடு பொதுமக்களிடையே நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.

More Stories
பிப்.23 முதல் வீடு வீடாகப் பரப்புரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகம் வளர்ச்சி மாநிலமாக தொடர துணை நிற்க வேண்டும்: ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ விழாவில் இளைஞர்களுக்கு முதல்வர் அழைப்பு
ரத்தக் குழாய் வெடித்த இளைஞருக்கு மறுவாழ்வு: ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை