February 27, 2026

கவுரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்; மார்ச் 1 முதல் சம்பளம் உயர்வு: அமைச்சர் கோவி. செழியன் அறிவிப்பு

திருவிடைமருதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கோவி.செழியன், இந்த ஊதிய உயர்வு வரும் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 9,646 ஆசிரியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் ரூ5,000 உயர்த்தி உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். திருவிடைமருதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஊதிய உயர்வு வரும் மார்ச் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 9,646 ஆசிரியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Spread the love