March 3, 2026

பழனி

பழனியில் வ உ சி மன்றம் சார்பாக, பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, 10.03.26 பால்குட ஊர்வலம், அன்னாபிஷேகம் மற்றும் உற்சவ சாந்தி  நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, இன்று எஸ்.பி.அசோக் பெருமாள் அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் அசோக் பெருமாள் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில்  செயலாளர் சுப்பிரமணியம், பொருளாளர் சுந்தர், நிர்வாகிகள் பி.ஆர்.ஓ.முருகேசன், கொள்கை பரப்பு செயலாளர் குகன், அமைப்பு செயலாளர் துர்க்கா கணேசன், ஆவின் ரவி, முருகானந்தம், செய்தியாளர் வின்னர்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 



Spread the love