
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, இன்று தஞ்சாவூர் மாவட்டம், அய்யாசாமிப்பட்டி பிரிவு சாலை எதிரில் நடைபெற்றது.
முன்னதாக, இதற்காக தவெக தலைவர் விஜய் தனி விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை 9:35 மணி அளவில் விஜய் வந்து சேர்ந்தார். பின்னர் அவர் தஞ்சாவூர் செல்வதற்காக தயார் நிலையில் இருந்ததால் தனி வேனில் புறப்பட்டுச் சென்றார். விஜய் வருகையை முன்னிட்டு கட்சித் தொண்டர்கள் யாருக்கும் விமான நிலையத்திற்குள் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால் தொண்டர்கள், நிர்வாகிகள், ரசிகர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கு வெளியே திருச்சி புதுக்கோட்டை சாலையில் திரளாக காத்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விஜய்யின் வாகனத்தை கண்டு உற்சாகம் அடைந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜய் வாகனத்தின் மீது பூக்களை தூவி வரவேற்பு அளித்தனர்.
சிறிது நேரம் ரசிகர்கள், தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜய் பின்னர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அவரது வாகனத்தை செல்ல விடாமல் ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர். மாத்தூர் ரிங் ரோடு அருகே திரண்டு இருந்த ரசிகர்கள் அவரது வாகனத்தை மறித்து வரவேற்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தவெக தலைவர் விஜய் வருகையையொட்டி திருச்சி விமான நிலையத்திற்குள் நுழைய காவல்துறை கடும் கட்டுப்பாடு விதித்தது. கட்சித் தொண்டர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. பலத்த சோதனைக்கு பின்னரே பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தேவையற்ற நேர விரயம் ஆவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
திருச்சி விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த தனியார் தொலைக்காட்சியின் நேரலை வாகனத்தை போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் தனியா தொலைக்காட்சி ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்