March 10, 2026

36 வது வார்டில் மாகாளியம்மன் கோவில் நிழல் கூரை துவக்க விழா 

மார்ச்-09

திருப்பூர் மாநகராட்சி 36 வது வார்டுக்கு உட்பட்ட சின்னான் நகர் பகுதியில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் முன்புறம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நிழற்கூரை அமைக்க பணி துவக்க விழாவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார்.உடன் தெற்கு மாநகரக் கழகச் செயலாளர் டிகேடி மு. நாகராசன் , பகுதி செயலாளர் நந்தகோபால்.36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்வி நிலைக்குழு தலைவர் பெ.திவாகரன், 36 வது வார்டு செயலாளர் பி. எஸ் பாண்டியன் ,திமுக நிர்வாகிகள் குட்டி பாய்,ஜெயகிரி, அன்பு,செல்வம், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டன

Spread the love