March 20, 2026

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் நியமனம்

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்தல் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், நடத்தை விதி​களை அமல்​படுத்​தும் வித​மாக சென்னை விமான நிலை​யத்​தில் சிறப்பு அதி​காரி​களை தேர்தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்தல் ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான அறி​விப்பு கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யான நிலை​யில், தமிழகம் முழு​வதும், தேர்தல் நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​து உள்​ளன.

2106 பறக்​கும் படைகள், நிலை கண்​காணிப்பு படைகள் சோதனை​யில் ஈடு​பட்டு வரு​கின்​றன. மேலும், விமான நிலை​யங்​களை​யும் கண்​காணிக்க தேர்தல் ஆணை​யம் முடிவு செய்​துள்​ளது.

அதன்​படி, சென்னை சர்​வ​தேச விமான நிலை​யம், சென்னை விமான நிலைய கார்கோ பகுதி ஆகிய​வற்றை கண்​காணிக்க, சிறப்பு அதி​காரி​களை இந்​திய தேர்தல் ஆணை​யம் நியமித்​துள்​ளது.

சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் வரு​கை, புறப்​பாடு பகு​தி​களில் சுங்​கச் சோதனை​களை கண்​காணிக்க, சுங்​கத்​துறை இணை ஆணை​யர் அந்​தஸ்​தில், சிறப்பு அதி​காரி ஒரு​வர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

அதே​போல், சென்னை விமான நிலைய கார்கோ பகு​தி​களில், சரக்​கு​கள் ஏற்​றும​தி, இறக்​குமதி பகு​தி​களில் சுங்​கச்சோதனை பிரிவு​களில் கண்​காணிப்​ப​தற்​காக இணை ஆணை​யர் அந்​தஸ்​தில் மற்​றொரு சிறப்பு அதி​காரி நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

by Taboola

Sponsored Links

You May Like

Your fingers can tell you a lot about your personality. What kind of fingers do you have?Tips and Tricks

Need a mouse that has unmatched performance?Upgrade Your Setup with the PX2 Metal 2.4G Wireless Mute Mouse Experience the perfect blend of sleek design and whisper-quiet performance with the PX2 Metal Wireless Mouse.TM Enterprises

Bee Keepers of India Selling Pure Honey online to Indian consumers via Ecommerce WebsiteHoney extracted from Bee Farms, unprocessed honey, unheated honey – Helps in reaching fitness goals – Bee Keepers also sell Pollen, Bee Wax and Infused HoneyScrolling Bee India

இவர்​கள் சென்னை விமான நிலை​யத்​தில் பயணி​கள், பார்​சல்​களை தீவிர​மாக கண்​காணித்​து, சந்​தேகத்​துக்​கிட​மான தங்​கம், வெள்​ளி, மின்​சாதன பொருட்​கள், போதைப் பொருட்​கள், போதை மாத்​திரைகள், கணக்​கில் வராத ரொக்​கம் போன்​றவை​கள் வந்​தால், அவற்றை பறி​முதல் செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

கடத்​தலின் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார் என்று முழு​மை​யாக விசா​ரித்​து, டெல்லி​யில் உள்ள தலைமை தேர்தல் அதி​காரிக்கு உடனடி​யாக அறிக்கை அளிக்க வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டு உள்ளது.

அத்​துடன், சென்னை விமான நிலை​யத்​தில் உள்ள வரு​மான வரித் துறை​யினரும், தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர். அவர்​களும் கூடு​தல் கண்​காணிப்பு அலு​வலர்​களை நியமித்​துள்​ளனர்.

Spread the love