சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியது தவெக. தேர்தலை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு நகங்களில் விஜய் பரப்புரை மேற்கொண்டார்.
வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயிலிக்குள் சென்று மூலவரான சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். அதன் பிறகு அங்கிருந்து அவர் காரில் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றார். விஜய்யை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

More Stories
திருப்பத்தூர் மாவட்டம்
கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லி. ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம் அனுப்பிவைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்.கலைச்செல்வி, உதவி பொறியாளர்.கார்த்திக், ஆகியோர் அம்பேத்கர் நகர் கால்வாய் பகுதிகளை உறிஞ்சு குழாய் வழியாகச் செல்லும் கழிவுநீர்களை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்