May 6, 2026

இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

திருப்பூர், மே.6-

திருப்பூர் இந்திராசுந்தரம் அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தொண்டு நிறுவனத்தின் நிறுவன

தலைவர் இந்திராசுந்தரம் தலைமை தாங்கி,21 மாற்றுத்திறனாளிகளுக்கு

சால்வை வித்து, கேடயம் மற்றும் இனிப்பு வழங்கி கவுரவித்தார்.அப்போது சாலையோரம் வசிக்கும் மாற்று

திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் தங்குவதற்கான வீடு மற்றும் அதற்கான செலவை ஏற்றுக்கொள்வதாக இந்திராசுந்தரம் உறுதியளித்தார். இதற்காக அவருக்கு மாற்று.திறனாளிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். இதில் தொண்டு நிறுவனத் தின் செயலாளர் ராஜா முகமது உள்பட பலர்கலந்து கொண்டனர் .

Spread the love