May 28, 2026

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மாயாண்டி கோவில் வைகாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்

சோழவந்தான் மே 27

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாயாண்டி சாமி மற்றும் ஸ்ரீ முனியாண்டி சுவாமி அம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் ஸ்ரீ சோனை சாமி கோவில் வைகாசி மாத உற்சவ விழா கடந்த வாரம் காப்பு கட்டுதளுடன் தொடங்கியது இந்த நிலையில் நேற்று இரவு பகவதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது இரவு இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து சக்தி கிரகம் எடுத்து ஊர்வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது தொடர்ந்து இன்று காலை முளைப்பாரி ஊர்வலம் இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது தொடர்ந்து மாயாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாலகிருஷ்ணாபுரம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்

Spread the love