June 9, 2026

பழனி அருகே  விபத்தில்  பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது

 கோட்டாட்சியர் அரசு மரியாதை செய்தார்

 பழனி ஜூன் 7

 பழனி அருகே உள்ளது சாமிநாதபுரம் இந்த ஊரைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் இவரது மகன் ஜெகன் வயது 21 டிப்ளமோ பட்டதாரி. இவர் உடுமலை ஆயில் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் இந்நிலையில் மடத்துக்குளம் அருகே டூவீலரில் வரும் பொழுது ஏற்பட்ட விபத்தில் இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.  இதை ஒட்டி அவரின் பெற்றோர்கள் ஜெகனின் உறுப்புகளை தானம் வழங்குவதாக கூறினர். அதனால் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. இதையொட்டி பழனி ஆர் டி ஓ கண்ணன், வாலிபர் ஜெகனின் உடலுக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை  செய்தார்.

Spread the love