June 8, 2026

“ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன்” – தெலங்கானா முதல்வர் கருத்தால் சர்ச்சை

ஹைதராபாத்: சர்​வா​தி​காரி ஹிட்​லரிடம் இருந்து உத்​வேகம் பெற்​றேன் என்று தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி கூறியிருப்​பது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது.

இரண்​டாம் உலகப் ​போர் காலத்​தில் ஜெர்​மனி சர்​வா​தி​காரி ஹிட்லரின் நாஜி படை​யில் ஹைட்ரா என்ற ரகசிய அறி​வியல் பிரிவு செயல்​பட்​டது. இந்த பிரிவு பல்​வேறு கொடூரங்​களில் ஈடுபட்ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இந்நிலையில் பெங்​களூரு​வில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தெலங்கானா முதல்​வர் ரேவந்த் ரெட்டி பேசி​ய​தாவது: ஹிட்​லரின் ஹைட்​ரா அமைப்​பு, யாரை வேண்​டு​மா​னாலும் படு​கொலை செய்யும் திறன் கொண்​ட​தாக இருந்​தது. ஹிட்​லரிடம் இருந்து பெற்ற உத்​வேகத்​தால் தெலங்​கானா அரசின் பேரிடர் மீட்​பு, பாதுகாப்பு அமைப்​புக்கு ஹைட்ரா என்று பெயர் சூட்​டினேன்.

இந்த ஹைட்ரா அமைப்​பு, ஹைத​ரா​பாத்​தில் பாரபட்​சமின்றி ஆக்கிரமிப்​பு​களை அகற்றி வரு​கிறது. தெலங்​கா​னா​வின் ஹைட்ரா திட்​டத்தை மும்​பை, சென்​னை, கொல்​கத்​தா, டெல்லி உள்​ளிட்ட நகரங்​களி​லும் பின்​பற்​றலாம். ஆக்​கிரமிப்​பு​கள் அகற்றப்​படு​வ​தால் வெள்ள தடுப்பு நடவடிக்​கைகளை திறம்பட மேற்​கொள்ள முடி​யும். இவ்​வாறு முதல்​வர் ரேவந்த் ரெட்டி பேசினார்.

இது குறித்து மத்​திய அமைச்​சரும் பாஜக மூத்த தலை​வரு​மான கிஷன் ரெட்டி சமூக வலை​ தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “காங்கிரஸ் கட்சி ஹிட்​லரை போன்​றது. அந்த கட்​சி​யின் அவசர நிலை மனப்​பான்மை மீண்​டும் வெளிப்​பட்டு உள்​ளது. ராகுல் காந்தி பாணி​யில் ரேவந்த் ரெட்​டி​யும் பேசுகிறார்” என்று தெரிவித்துள்​ளார். தெலங்​கா​னா​வின் பிர​தான எதிர்க்​கட்​சிகளில் ஒன்​றான பிஆர்​எஸ் கட்​சி​யின் தலை​வர்​களும் முதல்​வர் ரேவந்த் ரெட்​டி​யின் கருத்​துக்கு கடும்​ கண்​டனம்​ தெரி​வித்​துள்​ளனர்​.

Spread the love