முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கட்சியினருக்கு சில வலியுறுத்தல்களை வழங்கி இருக்கின்றார்
முக்கிய அம்சங்கள்:
முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள்
அமைச்சர் ஆனந்த் வலியுறுத்தல்

முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாள் வெகு விரைவில் வரவுள்ளது. முதல் முறையாக விஜய் முதலமைச்சராக தனது பிறந்தநாளை கொண்டாட இருக்கின்றார். நடிகராக இருக்கும்போதே அவரது பிணந்தநாளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். தற்போது ஒரு முதலமைச்சராக விஜய் பதவியேற்று இருக்கின்றார். அதுவும் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் கண்டிப்பாக கட்சியினரும் அவரது ரசிகர்களும் வெகு விமர்சையாக கொண்டாட இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் தவெக கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சில விஷயங்களை தனது கட்சி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி இருக்கின்றார். நேற்று தான் தவெக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். பனையூரில் உள்ள அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல விஷயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சில விஷயங்களை புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தினார்.
அதாவது முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி வரவுள்ளது. அந்த பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும். மற்ற கட்சிகளை போல பிளக்ஸ் பேனர் போன்றவற்றை வைக்க கூடாது. பட்டாசு வைத்து பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்க கூடாது. அமைதியான வழியில் யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாட வேண்டும்.
மிகப்பெரிய அளவில் நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாட வேண்டும் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வலியுறுத்தி இருக்கின்றார். ஏற்கனவே விஜய் நடிகராக இருக்கும்போது அவரது பிறந்தநாளை ரசிகர்கள் பல நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடுவார்கள். அதே சமயம் பேனர்கள், போஸ்டர்கள் போன்றவற்றில் அதிக செலவு செய்வார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டும் இருந்தது.
ஆனால் பேனர், போஸ்டர், பட்டாசு போன்றவற்றை தவிர்த்து நலத்திட்ட உதவிகளை செய்து வெகு விமர்சையாக விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இவரின் இந்த அறிவிப்பால் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் விஜய்யின் ஆதரவாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதே சமயம் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அதிக கவனம் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேவையில்லாமல் மக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் கொண்டாட்டங்கள் அமைந்துவிட கூடாது என்பதில் அதிக கவனம் தேவை. நலத்திட்ட உதவிகளை செய்வதன் மூலம் மக்களும் பயன் பெறுவார்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்களும் அர்த்தம் பெரும். ஆனால் பேனர், பட்டாசு போன்றவற்றால் யாருக்கும் எந்த பயணம் லாபமும் இல்லை. மக்களுக்கு தொந்தரவு தான் உண்டாகும். தேவையில்லாத அவப்பெயர் கிட்டும்.
எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு தவெக ஆதரவாளர்கள் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தவெகஅரசு குறித்து அடுக்கடுக்காக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இந்த சமயத்தில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஏதேனும் நடந்தால் அது மேலும் சர்ச்சையாகும். எனவே அதனை கருத்தில் கொண்டு தவெக ஆதரவாளர்கள் செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

More Stories
“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” – மு.க.ஸ்டாலின்
அஞ்சலையம்மாள், நம்மாழ்வார் பெயர்களில் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுடன் விருது
காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு