February 7, 2026

பழனி அருகே கிணற்றைக் காணவில்லை என்று பொதுமக்கள் புகார்

 பழனி ஜனவரி 28

 பழனி தாலுகா கீரனூர் பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர் அப்பொழுது பொதுமக்கள் தங்களுக்கு பாத்தியப்பட்ட கிணற்றை காணவில்லை என்ற வாசகம்   ஏந்தியபடி வந்தனர். காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது, பழனி கீரனூர் பேரூராட்சியில் மூணாவது வார்டில் பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு தற்பொழுது ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அதை மீட்டு பொதுமக்களுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Spread the love