June 13, 2026

ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு கூடாது: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்

சென்னை: ஓய்​வு​பெற்ற அரசு மருத்​து​வர்​களுக்கு பணி நீட்​டிப்பு வழங்​கக்​கூ​டாது என்று தமிழ்​நாடு அரசு டாக்​டர்​கள் சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் மருத்​து​வர் பி.​பால​கிருஷ்ணன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திமுக, அதி​முக ஆட்​சி​யில் ஓய்​வு​பெற்ற அரசு மருத்​து​வர்​களில் தங்​களுக்கு சாதக​மானவர்​களுக்கு பணி நீட்​டிப்பை வழங்​கி​னார்​கள்.

இதனால், சீனியர் மருத்​து​வர்​களுக்கு முறை​யான பதவி உயர்வு கிடைக்​காத நிலை ஏற்​பட்​டது. இதைக் கண்​டித்து பல்​வேறு போராட்​டங்​களை நடத்​தினோம்.

ஓய்வு பெற்​றவர்​கள் உயர் பொறுப்​பு​களில் வரும்​போது முறை​கேடு​கள் நடை​பெற வாய்ப்​புள்​ளது. அவர்​கள் மீது துறைரீ​தி​யான நடவடிக்​கை​யும் எடுக்க முடி​யாது.

அதே​நேரம், அரசு மருத்​து​வர்​கள் அரசுக்கு கட்​டுப்​பட்​ட​வர்​களாக இருப்​பார்​கள் என்​ப​தைக் கவனத்​தில் கொண்​டு, கடந்த ஆட்​சி​யாளர்​கள் செய்த தவறை, தவெக அரசு செய்​யாது என்று நம்​பு​கிறோம். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது

Spread the love