February 9, 2026

ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தம்: சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடுமா?

ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்க கூட்டமைப்பினர் வேலைநிறுத்தம்: சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடுமா?

Updated on: 

சென்னை: தமிழ்​நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்​கங்​களின் கூட்​டமைப்​பினர் வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​பட​வுள்​ள​தால் சென்​னை​யில் நாளை (பிப்​.10-ம் தேதி) ஆட்​டோக்​கள் ஓடாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் பொதுப் போக்​கு​வரத்து சேவை​களில் ஆட்​டோ, கால் டாக்ஸி உள்​ளிட்ட வாடகை வாக​னங்​களுக்கு முக்​கியப் பங்கு உள்​ளது. இந்​நிலை​யில் பல ஆண்​டு​களாக ஆட்டோ மீட்​டர் கட்​ட​ணம் உயர்த்​தப்​ப​டா​மல் உள்​ள​தாக​வும், பலமுறை கோரிக்கை வைத்​தும் தற்​போது வரை எந்த மாற்​ற​மும் இல்லை எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்​கின்​றனர்.

மேலும் தற்​போது ஓலா, ஊபர் போன்ற தனி​யார் நிறு​வனங்​களாலும் ஓட்டுநர்கள் கடும் சிரமத்தை எதிர்​கொள்​கின்​றனர். இந்​நிலை​யில் ஓலா, ஊபர், ரேப்​பிடோ, நம்ம யாத்​திரி உள்​ளிட்ட நிறு​வனங்​களை முறைப்​படுத்த அக்​ரி​கேட்​டர் சட்​டம் அமல்​படுத்த வேண்​டும்.

கடந்த 2 ஆண்​டு​களாக நடத்​தப்​ப​டா​மல் உள்ள தொழிற்​சங்​கங்​கள், நிறு​வனங்​கள் மற்​றும் அரசுத் துறை அதி​காரி​கள் இடையே​யான முத்​தரப்பு பேச்​சு​ வார்த்​தையை நடத்த வேண்​டும்.

தமிழகத்​தில் பல பள்​ளி​களில் சொந்த பயன்​பாட்டு வாக​னங்​களை பயன்​படுத்தி பள்​ளிக் குழந்​தைகள் அழைத்​துச் செல்​லப்​படு​கின்​றனர். இது குழந்​தைகளின் உயிருக்கு பெரும் அச்​சுறுத்​தலாக உள்​ளது.

மேலும், அரசுக்​கும் கடுமை​யான வரி வரு​வாய் இழப்பு ஏற்​படு​கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​பது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர்கள் கோவை, நெல்​லை, மதுரை, திருச்​சி​யில் உள்ள போக்​கு​வரத்து இணை ஆணை​யர் அலு​வல​கங்​கள் முன் போராட்​டம் நடத்​தி​யுள்​ளனர்.

மேலும் நாளை (பிப்​.10-ம் தேதி) தமிழகம் முழு​வதும் ஒரு​நாள் வேலை நிறுத்​தப் போராட்​ட​மும், சென்னை கிண்​டி​யில் உள்ள போக்​கு​வரத்து ஆணை​யரகத்​தில் காத்​திருப்​புப் போ​ராட்​ட​மும்​ நடத்​த உள்​ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர்கள் பங்கேற்பதால் சென்னையில் நாளை ஆட்டோக்கள் ஓடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Spread the love