ஆண்டிபட்டி, மார்ச் 15, தேனி மாவட்டம்
ஆண்டிப்பட்டியில் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டிக்கும் வகையில், சமையல் கேஸ் சிலிண்டருக்கு தூக்கு கயிறு போட்டு, மரக்கட்டைகளால் தூக்கு மேடையிட்டு தூக்கிலிட்டு மாலை அணிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியால் தமிழகத்தில் வணிக கேஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பழைய முருகன் தியேட்டர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல் டீக்கடை உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனை கண்டிக்கும் வகையில் இரண்டு மரக்கட்டைகளால் மேடை போல அமைத்து சமையல் கேஸ் சிலிண்டருக்கு தூக்கு கயிறு போட்டு தூக்கிலிட்டு தொங்கவிட்டு நூதன முறையில் கோஷம் எழுப்பி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் , மத்திய அரசை கண்டித்தும், அமெரிக்காவை கண்டித்தும் கோஷம் எழுப்பப்பட்டது.தமிழகத்தில் ஹோட்டல் வணிக நிறுவனங்கள் இதன் காரணமாக பெரிதும் பாதிக்க பட்டிருப்பதாகவும் கோஷம் எழுப்பப்பட்டது

More Stories
பெரம்பலூர், மார்ச்.15-
தேனி மாவட்டத்தில்
பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன் தலைமை வகித்தார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் என் பாஸ்கரன், கண்பத் கிரேண்ட் ஹோட்டல் அதிபர் என்.ஹரிஹரமுத்து, வள்ளுவர் தியேட்டர் அதிபர் செந்தில்குமார், இளைஞர் அணி நிவாஸ்தீன், தவ்பிக் அஹமது ஆகியோர் பங்கேற்றனர்