எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம் துரோகம் மட்டுமே என்று திமுகவில் இணைந்த ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நிர்வாகிகள் தீவிரமாக அரசியல் தேர்தல் பரப்புரை மற்றும் பிரச்சாரங்களில் ஈடுப்பட வேண்டும். களஆய்வில் நடத்தப்படும் விவரங்களை வழங்க வேண்டும். கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் முடியும்வரை கூட்டணிகட்சிகளுடன் எந்தவித பிரச்சனையும் வரகூடாது.
திமுக சார்பில் ஆலோசனை கூட்டம்
மேலும், தொகுதி வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.அந்த வகையில் ,தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகையில், தேர்தல் வருகின்ற பொழுது அரசியல் கட்சிகள் எல்லாம் படையெடுக்க ஆரம்பித்து விடுகிறது. அதிலும் பழனிச்சாமி என்ற ஒருவர் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் கத்து கத்து என கத்துகிறார். என்ன சொல்கிறார்.. என்பதே புரியவில்லை.
அவருடைய பேச்சுக்கு மக்களே பதில் சொல்லி விடுவார்கள் அவருக்கு ஒன்றே ஒன்று நன்றாக தெரியும் தன்னை ஆளாக்கியவர்களுக்கு துரோகம் செய்வது என்று கூறினார். பேசிய அவர் ஆட்சியில் அவர் நீடிப்பதற்கும், அவரை காப்பாற்றியவர்களுக்கும், துரோகம் செய்வது, ஊர்ந்து சென்று முதலமைச்சராக பதவியை பெற்றவர்.
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். தமிழக முழுவதும் மகத்தான வெற்றியை திமுக பெற்று வருகிறது. மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்பார்.
கோட்டைவிட்ட எடப்பாடி! தட்டி தூக்கிய திமுக! Explained
எடப்பாடிக்கு தெரிந்தது துரோகம் மட்டுமே
அதற்கு அச்சாரமாக மிகப்பெரிய அளவில் கூடிக் கொண்டிருக்கிறது மெகா கூட்டணி. கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொது மக்களுக்காக சமூகநீதி, சமநோக்கத்தோடு மக்கள் அனைவருக்கும் ஏற்ற வாழ்க்கை நடைமுறையை நிலை நிறுத்தும் வகையில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை நன்றி மறந்தவர்களுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். தனது சுயநலனை கொண்டவர். ஒருபோதும் தலைவராக இருக்க முடியாது .தமிழக மக்கள் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு தயாராக இருக்கிறார்கள். நல்ல தீர்ப்பை வழங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினர்.
எடப்பாடி பழனிசாமி மீது ஓ பன்னீர்செல்வம் விமர்சனம்
தொடர்ந்து திமுகவில் இணைந்ததிலிருந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஓ பன்னீர்செல்வம் இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.திமுகவில் இணைந்த ஓ பன்னீர் செல்வத்திற்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தென் மாவட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் ஓபன்னீர் செல்வத்திற்கு அவர் அதிமுகவில் இருந்த போது வெற்றி பெற்ற போடி சட்டமன்ற தொகுதியை மீண்டும் திமுக சார்ப்பில் போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் சுமார் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் திமுக இணைந்தது குறிப்பிடத்தக்கது.

More Stories
‘‘திமுக ஆட்சியை விரட்டியடிக்க தமிழக மக்கள் முடிவு செய்துவிட்டனர்’’ – எடப்பாடி பழனிசாமி
“காலம் பேசாது; காத்திருந்து பதில் சொல்லும்” – ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி
25 நாட்கள் விஜய் பிரச்சாரம் – தவெகவின் தேர்தல் வியூகம் என்ன?