
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.14) பவுனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது. 2 நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ( பிப்ரவரி 14) தங்கம் விலை மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,560-க்கும், பவுனுக்கு ரூ.1,280 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,16,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,450-க்கும்,பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.99,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

More Stories
மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்புகிறார் சரத் பவார்!
முதுமலை வனப் பகுதியில் வலம் வந்த ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு
அசாமில் அவசர காலத்தில் விமானம் தரையிறங்கும் சாலை: முதலில் லேண்ட் ஆகி திறந்துவைத்த மோடி!