February 17, 2026

பழனியில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

 பழனி பிப்ரவரி 17 

பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பழனி மாவட்டம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கு மாவட்ட தலைவர் ஜே பி சரவணன் தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில இணைச்செயலாளர் சரவண பொய்கை கந்த விலாஸ் அதிபர் என் பாஸ்கரன்,  மாவட்டச் செயலாளர் வள்ளுவர் தியேட்டர் என் செந்தில்குமார், மாவட்ட கௌரவத் தலைவர் கண்ணுசாமி, மாவட்ட செயலாளர் ஜெகதீஷ், காணியாளர் நரேந்திரன், துணைச் செயலாளர் பழனிச்சாமி, பிஆர்ஓ ராதாகிருஷ்ணன், எஸ் சஞ்சய் மணி, தேவா ரம்யா கிருஷ்ணன் உள்பட  ஏராளமானவர்கள் பங்கேற்றனர்

Spread the love