சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் 19 பேர் போட்டியிட எடப்பாடி பழனிசாமியிடம் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகச் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் உள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக இந்த தேர்தலுக்காக ஆயத்தமாகி வருகிறது. அதற்காக ஓராண்டுக்கு முன்பு அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் பாமக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சூழலில், திமுக கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்வதில் இறுதிக் கட்டத்தில் உள்ளது.
ஆனால் அதிமுக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் இருந்து வருகிறது. இந்த சூழலில், அதிமுக நான்கு பேர் கொண்ட தொகுதி பங்கிட்டு குழுவை அமைத்துள்ளது. தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது: தமிழக மற்றும் புதுச்சேரியில் கேளரா மாநில சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ளக் குழுக்கள் அமைக்கப்படுகிறது.அதன்படி, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குழு
கே.பி முனுசாமி, எஸ். பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், பா வளர்மதி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர் .தேர்தல் பிரச்சார பணிகளை முறைப்படி நடத்தத் தேர்தல் பிரச்சார குழுவில் 10 பேர் அமைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை ,தளவாய் சுந்தரம் ,செல்லூர் ராஜு, அன்பழகன், காமராஜ் ,கோகுல இந்திரா பெஞ்சமின், உடுமலை ராதாகிருஷ்ணன், சிவந்தி, முன்னாள் சபாநாயகர் தனபால் இந்த தேர்தல் குழுவில் எட்டு பேர் இடம் பெற்றுள்ளன.
கோட்டைவிட்ட எடப்பாடி! தட்டி தூக்கிய திமுக! Explained
முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ,அக்ரிகிருஷ்ணமூர்த்தி, அப்துல் ரஹீம் ,ராஜலக்ஷ்மி ,முன்னாள் எம்பி வேணுகோபால், ராஜ சத்தியன் உள்ளிட்டோர் தேர்தல் சம்பந்தமான சட்ட குழுவில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கும் குழுவில் ஏழு பேர் இடம் பெற்றுள்ளன. முன்னாள் அமைச்சர் தங்கமணி, ஜெயக்குமார், உதயகுமார், வைகைச் செல்வன் ,மாபா பாண்டியன் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் உள்ளிட்டோர் செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

More Stories
பாஜக, அதிமுக உள்பட யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை: தவெக திட்டவட்டம்
விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தினாரா பவன் கல்யாண்.. தவெகவின் முடிவை சொன்ன செங்கோட்டையன்
விஜயை என்டிஏ-வுக்கு அழைத்த பவன் கல்யாண்? சந்திப்பு பற்றி என்ன சொன்னார் தெரியுமா?