August 20, 2026

ஈரோடு

ஈரோடு மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர்கள் சங்கம் (EOGS) சார்பாக “ABHAYA DAY – 2026″மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பு மரியாதை கண்ணியம் ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் பூர்ணிமா சரவணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் அபுல் ஹாசன், டாக்டர் சி என் ராஜா, ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்து மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் வாணி மாதவன், ஜி ஆர் தரணிப்பிரியா, ராஜலக்ஷ்மி, ரேவதி சதாசிவம், என் தரணி, கோகுல பிரியா, ஸ்ருதி ராஜேந்திரன், உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

Spread the love