சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் அதிமுகவிற்கு ஆதரவு தருவதாக தெரிவித்து இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் ,சேலம் மாவட்டத்தில் அதிமுக தான் வெற்றிபெறும் என ரஜினி ரசிகர் பேச்சு
முக்கிய அம்சங்கள்:
சேலம் ரஜினி ரசிகர்கள்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என பேச்சு
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் தான் போட்டியிடுகின்றார். கடந்த மூன்று முறையாக தொடர்ந்து எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் வெற்றிபெற்றுள்ளார். தற்போது மீண்டும் அதே தொகுதியில் தான் எடப்பாடி பழனிச்சாமி இம்முறையும் போட்டியிடுகின்றார். தற்சமயம் இபிஎஸ் எடப்பாடி தொகுதியில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றார்.
ஒருபக்கம் அவரின் சில பேச்சுக்கள் சர்ச்சையானாலும் மறுபக்கம் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரைக்கு ஆதரவும் இருந்து வருவதாக சொல்லப்படுகின்றது. மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் ,மீண்டும் முதல்வராவேன் என்ற நம்பிக்கையுடன் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை செய்கின்றார். இந்நிலையில் சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சேலம் ரஜினி ரசிகர்கள் சொன்னது என்னெவென்றால், சேலம் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஆதரவு தருகின்றோம். தலைவருக்கு இதுகுறித்து தகவல் அனுப்பிவிட்டோம். நாங்கள் எந்த ஒரு பதவியிலும் இல்லை.நாங்கள் அனைவரும் ரசிகர்கள் தான். ரசிகர்கள் தானே முக்கியம்.ஒரு வருடத்திற்கு முன்பே இந்த முடிவை நாங்கள் எடுத்துவிட்டோம்.
சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் அனைவரிடமும் ஆலோசித்து நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். எங்கள் மண்ணின் மைந்தர் எடப்பாடியார் தான் முதல்வராக வேண்டும் என்ற முடிவில் அவருக்கு நாங்கள் ஆதரவு தருகின்றோம் என்றார் அந்த ரஜினி ரசிகர். மேலும் பேசிய அவர், நாங்களும் சேலம் தொகுதியில் பரப்புரை செய்து வருகின்றோம். இது ஒரு ரஜினி ரசிகர்களாக எங்களுடைய தனிப்பட்ட முடிவு தான்.
சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றிபெறும் என நம்பிக்கையாக பேசினார் ரஜினி ரசிகர். குறிப்பாக தலைவருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பிவிட்டோம் என அந்த ரஜினி ரசிகர் குறிப்பிட்டு இருக்கின்றார். ஆனால் கண்டிப்பாக இதற்கு ரஜினி அனுமதிக்கமாட்டார் என்று தான் தெரிகின்றது. நான் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு கிடையாது என ரஜினிதெளிவாக பலமுறை கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக அரசியல் குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறவும் அவர் விரும்புவதில்லை. இந்த சமயத்தில் அவரின் ரசிகர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்போம் என தெரிவித்து இதுகுறித்து தலைவருக்கு கடிதம் அனுப்பிவிட்டோம் என்றும் கூறியிருக்கின்றனர். எனவே இதெல்லாம் ரஜினியின் அனுமதி பெற்று தான் இவர்கள் செய்கிறார்களா ? என்ற கேள்வி எழுகின்றது.
ரஜினிக்கு இந்த விஷயம் தெரிய வந்திருந்தால் கண்டிப்பாக இதற்கு அவர் அனுமதி வழங்கி இருக்க மாட்டார். ஆனாலும் இவர்கள் தலைவருக்கு தகவல் அனுப்பிவிட்டோம் என்றே சொல்கின்றனர். விரைவில் ரஜினி தரப்பில் இருந்து இதுகுறித்து ஏதேனும் அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் ரஜினியே ,தான் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு இல்லை என கூறி வருகின்றார்.
அப்படி இருக்கும்போது அவருடைய ரசிகர்கள் என குறிப்பிட்டு சேலம் மாவட்டத்தில் அதிமுகவிற்கு ஆதரவு தருவதாக சொல்லப்படுகின்றது. ஏற்கனவே அரசியலில் ரஜினியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற விவாதம் இன்றளவும் போய்க்கொண்டு இருக்கின்றது. இந்த சமயத்தில் இதுபோன்ற செயல்கள் கண்டிப்பாக சர்ச்சையை ஏற்படுத்தும் என்றே தெரிகின்றது.
மறுபக்கம் ரஜினியை கலந்துகொள்ளாமல், அவரிடம் அனுமதி பெறாமல் எப்படி அவருடைய ரசிகர்கள் என குறிப்பிட்டு அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்க முடியும், ஆதரவு தெரிவிக்க முடியும் என்ற கேள்வியும் எழுகின்றது. விரைவில் இதுகுறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More Stories
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்றதும் அமலுக்கு வரும் விதிமுறைகள் என்னென்ன?
திருமணம் முடிந்த கையோடு தவெக விஜய் பிரசார வாகனத்தில் ஏறிய மணமக்கள்: வைரல் வீடியோ!
திருச்சி பரப்புரையால் கிளம்பிய சர்ச்சை.. தவெக விஜய் மீது வழக்குப்பதிய வேண்டும்.. சிபிஎம் சண்முகம் அதிரடி