திருப்பத்தூர், ஜூன்.23-
திருப்பத்தூர் கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா கந்திலி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் S. முருகன் தலைமையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழக முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் முனிசாமி அவர்கள் முன்னிலையில் தூய்மை பணியாளர்களுக்கு புடவை வேட்டி மற்றும் 100 பேருக்கு மரக்கன்றுகள் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. நல திட்ட உதவிகளை பெற்று கொண்ட தூய்மை பணியாளர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட கொள்கை பரப்பு இணைச் செயலாளர் T. V. ஜெகன் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கந்திலி ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய சார்பு நிர்வாகிகள் கண்டிலி கிழக்கு ஒன்றிய ஊராட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்