June 17, 2026

கல்வி உதவித்தொகை வழங்குவதாக வாட்ஸ்அப் வாயிலாக மோசடி அழைப்புகள்: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

சென்னை: பள்ளி மாணவர்​களுக்கு அரசின் சார்​பில் கல்வி உதவித்​தொகை வழங்​கு​வ​தாகக் கூறி, வாட்​ஸ் அப் அழைப்​பு​கள் வாயி​லாக மோசடிகள் நடை​பெற்று வரு​வ​தால், பெற்​றோர் அதை நம்பி ஏமாற வேண்​டாம் என, பள்​ளிக் கல்​வித் துறை எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கோடை விடு​முறை முடிவடைந்து அனைத்து பள்​ளி​களும் ஜூன் 4-ம் தேதி திறக்​கப்​பட்​டு, தொடர்ந்து வகுப்​பு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அரசு மற்​றும் அரசு உதவி பெரும் பள்​ளி​களில் முதல் நாளிலே மாணவர்​களுக்கு பாடப் புத்​தகம், நோட்​டு, சீருடை உள்​ளிட்ட நலத் திட்ட உதவி​கள் வழங்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், பள்​ளிக் கல்​வித் துறை​யின் பெயரை தவறாக பயன்​படுத்தி சிலர் உதவித் தொகை என்ற பெயரில், பெற்​றோரிடம் மோசடி​யில் ஈடு​பட்டு வரு​வ​தாகத் தெரிய வந்​துள்​ளது.

பள்​ளி​களில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பெற்​றோரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்​ளும் மர்ம நபர்​கள், உங்​கள் குழந்தை ரூ.50 ஆயிரம் உதவித் தொகை பெற தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. இதைப் பெற ரூ. 18 ஆயிரம் முன் பணமாக செலுத்த வேண்​டும். இத்​தொகை பின்​னர் திருப்பி அளிக்​கப்​படும் என தெரிவிக்​கின்​றனர்.

அதன் பிறகு, பெற்​றோரின் வாட்​ஸ்​அப் எண்​ணுக்கு க்யூ ஆர் ஸ்கேன் குறி​யீட்டை அனுப்பிவைத்​து, அதன் மூலம் பணம் செலுத்​த​மாறு கூறுகின்​றனர். மேலும், பெற்​றோரை நம்ப வைப்​ப​தற்​காக ஏற்​க​னவே உதவித் தொகை பெற்​ற​தாகக் கூறி சில பெற்​றோர்​களுக்கு அனுப்​பிய ஸ்கீரின் ஷாட்டை போலி​யாக அனுப்பி வைக்​கின்​றனர்.

இதை உண்மை என நம்​பும் சில பெற்​றோர், சம்​பந்​தப்​பட்ட எண்​களுக்கு பணத்தை அனுப்பி வைக்​கின்​றனர். பின்​னர், பணம் செலுத்​திய ஓரிரு நாள்​களில் அவர்​களது வங்​கிக் கணக்​கில் உள்ள மொத்​தத் தொகை​யை​யும் மர்ம நபர்​கள் தங்​களது வங்​கிக் கணக்​குக்கு மாற்றி உள்​ளனர்.

இதுகுறித்​து, பள்​ளிக் கல்​வித் துறை அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “இது​போன்ற மோசடி கடந்த 2023-ம் ஆண்டு முதல் இருந்து வரு​கிறது. பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில், உதவித் தொகை வழங்​கு​வதற்​காக பெற்​றோர்​களிடம் யாரும் தொடர்பு கொள்​வ​தில்​லை.

பிற்​படுத்​தப்​பட்​டோர் நலத்​துறை, சமூக நலத்​துறை என அந்​தந்த நலத்​துறை சார்​பில், மாணவர்​களின் வங்​கிக் கணக்​குக்கு நேரடி​யாக கல்வி உதவித் தொகை செலுத்​தப்​படு​கிறதே தவிர, கூகுள் பே, போன் பே போன்​றவற்​றின் மூலம் அனுப்​பப்​படு​வ​தில்​லை.

இது தொடர்​பாக வரும் அழைப்​பு​கள், குறுஞ்​செய்​தி​களை பெற்​றோர் நம்ப வேண்​டாம். கடந்த காலங்​களில் இது​போன்ற மோசடிகளில் ஈடு​பட்​ட​வர்​கள் மீது காவல் துறை​யில் புகார்​கள் அளிக்​கப்​பட்டு நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. எனவே, மோசடி நபர்​களிடம் ஏமாறாமல் பெற்​றோர் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்” என தெரி​வித்​தனர்.

வேலை​நாள் 210 ஆக குறைப்பு இதற்​கிடையே, பள்​ளிக் கல்​வித் துறை வெளி​யிட்ட 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான நாட்​காட்​டி​யின்​படி, பள்ளி வேலை​நாட்​கள் 210 ஆக குறைக்​கப்​பட்​டுள்​ளது. முந்​தைய நாட்​காட்​டி​யில் வேலை​நாள் 220 ஆக நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது.

மேலும், புதிய நாட்​காட்டி அறி​விப்​பின்​படி, அனைத்து சனிக்​கிழமை​களும் முழு விடு​முறை நாட்​களாக இருக்​கும். இந்த நாட்​காட்டி அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களுக்கு மட்​டும் பொருந்​தும் என பள்​ளிக் கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.

வெயில், மழை காரண​மாக பள்​ளி​களுக்கு விடு​முறை விடப்​படும் சூழலில், அதை ஈடு​செய்ய சனிக்​கிழமை வேலை நாளாக அறிவிக்​கப்​படு​வது வழக்​கம். அது​போன்ற எதிர்​பாரா விடு​முறையை ஈடு​செய்ய சனிக்​கிழமை வேலை​நாளாக இருக்​குமா அல்​லது இருக்​காதா என்​பது பற்​றி புதி​ய நாட்​காட்​டி​யில்​ எது​வும்​ குறிப்​பிடப்​படவில்​லை

Spread the love