சென்னை: பயணிகள் வசதிக்காக, தாம்பரம் – போடிநாயக்கனூர் சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் வழக்கமான ரயில்களுக்கு பயணிகளின் அதிக தேவை அடிப்படையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில், சேவைகள் நீட்டிக்கப்படுகின்றன. அந்த வகையில், தாம்பரம் – போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது.
இதன்படி, தாம்பரம் – போடிநாயக்கனூருக்கு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (06059) புறப்பட்டு, மறுநாள் காலை சென்றடைகிறது. இந்த ரயிலின் இரண்டு சேவைகள் (ஜூன் 20, 27) நீட்டிக்கப்பட்டுள்ளன.
மறுமார்க்கமாக, போடிநாயக்கனூர் – தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06060) சேவை வரும் ஜூன் 21, 28 ஆகிய தேதிகளில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடை – பொதுமக்கள் அவதி
முதலமைச்சர் விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கு:வீடியோ கான்பரன்ஸ் வேண்டாம்..நீதிமன்றம் வைத்த செக்
கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த தங்கம் தென்னரசு வலியுறுத்தல்