துபை அருகே ட்ரோன் தாக்குதலில் 4 பேர் காயம் ஏற்பட்டது பற்றி..
துபை சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில், இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், துபை சர்வதேச விமான நிலையத்தின் மிக அருகே ஈரான் இன்று (மார்ச் 11) ட்ரோன் தக்குதல்களை நடத்தியுள்ளது. துபை விமான நிலைய ஓடுபாதையில் ட்ரோன்கள் விழுந்து நொறுங்கியதில் இந்திய உள்பட 4 பேர் காயமடைந்தனர். இருப்பினும் விமான சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.
துபை ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
வளைகுடா நாடுகளை ஈசல் போல் ஈரானிய ட்ரோன்கள் முற்றுகையிட்டு வருகின்றது. இன்று காலை ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு கானா நாட்டவரும், ஒரு வங்கதேச நாட்டவருக்கும் காயம் அடைந்தனர். இந்திய நாட்டவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.Advertise with us
இருப்பினும் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து இயக்கப்படுகிறது. துபையில் தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீண்ட தூர விமான நிறுவனமான எமிரேட்ஸின் தாயகமான துபை சர்வதேச விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கு உலகின் மிகவும் பரபரப்பானது. விமான நிலையம் போரில் குறிவைக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் விமானங்களை தொடர்ந்து இயக்கி வருவதாகவும், அதற்கான அட்டவணை தயாரித்து வருவதாக ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

More Stories
டிரம்ப்புடன் அம்பானியின் ரிலையன்ஸ்: அமெரிக்காவில் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!
எண்ணெய்க் கிணறுகள் பற்றி எரிவதால் டெஹ்ரானை சூழ்ந்த கருமேகங்கள் – மூச்சுவிட முடியாமல் பொதுமக்கள் அவதி
அமெரிக்காவுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! – ஈரான் அரசு அறிவிப்பு!