சட்டப்பேரவை தேர்தலையொட்டி பிரச்சார பாடலை தேமுதிக வெளியிட்டிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் தங்களது பிரச்சார பாடல்களை வெளியிட்டுள்ளன.
அந்த வரிசையில் தேமுதிகவும் தற்போது பிரச்சார பாடலை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘திசையெட்டிலும் முழங்கட்டும் முரசு, நம் திசை மாற்ற வல்லதப்பா ஒரு அரசு. பெரும் தலைமைகள் கை கோர்க்க, இந்த இணையற்ற தமிழகம் இன்று சிறக்க, பிரேமலதா தலைமையில் அனைவரும் நாம் அதிகாரப் பாதையில் நடை போடுவோம்.’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.

More Stories
தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள்
‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? – பாஜக கேள்வி
“அடுத்த 10 நாட்களுக்கு…” – தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை