
புதுடெல்லி: காமன் காஸ் அமைப்பு தாக்கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
காமன் காஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, “தேர்தலின்போது கட்சிகள் பண பலத்தை பயன்படுத்துவது ஜனநாயகத்தை பாதிக்கிறது. தேர்தல் செலவின கட்டுப்பாடுகள் இருந்தாலும் அது வேட்பாளருக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது” என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பொதுநல மனு குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

More Stories
‘‘நான் ஊழல்வாதி அல்ல என்பது நிரூபணமாகிவிட்டது’’ – தீர்ப்புக்குப் பின் கேஜ்ரிவால் கண்ணீர் பேட்டி!
தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர்கள் அரவிந்த் கேஜரிவால், மனீஷ் சிசோடியா உள்பட 23 பேரையும் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பிரதமர் மோடியை பின் தொடரும் 10 கோடி பேர்!