
கோவை: மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் வழங்கிய கோவையை சேர்ந்த சிறுமி வெண்பாவின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘உடலுறுப்புகளைக் கொடையளித்து இறவாப் புகழை எய்திவிட்ட குழந்தை வெண்பா நம் மனங்களில் நிறைந்து வாழ்வாள். பெற்றெடுத்த அன்பு மகளை இழந்த வலியையும் தாங்கிக் கொண்டு, மாந்தநேயத்தோடு அந்தக் குழந்தையின் உடலுறுப்புகளைக் கொடையளித்த பெற்றோர் சோமு மற்றும் சுகன்யா ஆகியோருக்கு நமது அன்பு ஆறுதலாய் துணை நிற்கட்டும்.
சோமு நமது திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிர்வாகியாக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உடலுறுப்புகளைக் கொடையளிப்பது குறித்து நான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதேபோல், கொடையாளரின் இறுதி நிகழ்வுகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனக் கடந்த 23-09-2023 அன்று அறிவித்திருந்தேன்.
இதனைத் தொடர்ந்து, தங்களது உடலுறுப்புகளைக் கொடையளிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு மட்டுமல்ல; இந்திய மாநிலங்களிலேயே அதிகளவுக்கு அதிகரித்து வருகிறது.
இதுவரையில், இறப்பிலும் பலருக்கு வாழ்வளித்த 653 பேருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. அறிவியல் மனப்பான்மையோடு சிந்தித்துச் செயல்படும் தமிழ்நாடு வளரட்டும். இறப்பிலும் புதுவாழ்வளிக்கும் இந்தக் கருணை உள்ளங்களே போற்றுதலுக்குரிய தியாகிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

More Stories
அதிமுக, பாஜக வேட்பாளர்கள் சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு
அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பு…. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அரிமளம் ஒன்றியதிற்க்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஐபி செந்தில் குமாரை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாகல் நகர் ரவுண்டானா அருகே தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்