June 25, 2026

பழநி கோயிலில் விரைவு தரிசனத்துக்காக ரூ.3,000 லஞ்சமாக பெற்ற காவலாளிகள் 3 பேர் பணி நீக்கம் – செக்யூரிட்டி நிறுவனத்​துக்கு ரூ.5 லட்​சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வந்த வெளியூர் பக்தர்கள் 3 பேர், தனி​யார் காவலாளி​கள் 2 பேரிடம் விரைவு தரிசனம் குறித்து கேட்டுள்ளனர். இதற்காக ரூ.3 ஆயிரம் பெற்று கொண்ட காவலாளி​கள், கோயிலில் இருந்த மற்றொரு காவலாளி மூலம் விரை​வாக தரிசனம் செய்ய வைத்​துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோயில் இணை ஆணையர் மாரிமுத்​து, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

இதில், காவலாளிகள் மீதான குற்றச்சாட்டு​கள் உண்மை எனத்தெரிய​வந்​ததையடுத்து

காவலா​ளி​கள் 3 பேரும் பணி நீக்​கம் செய்யப்பட்டனர்.மேலும், சம்பந்தப்பட்ட தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து இணைஆணையர் உத்​தர​விட்​டார்.

Spread the love