May 3, 2026

பழனி மாரியம்மன்  கோவிலில்  அன்னதானம்

 ஸ்ரீ கந்த விலாஸ் என்.செல்வக்குமார்  வழங்கினார்

 பழனி பிப்ரவரி 21

 பழனி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ கந்த விலாஸ் அதிபர் என்.செல்வக்குமார் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பழனி மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழனி வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பிலும், உபயதாரர்கள் சார்பிலும்,  ஒவ்வொரு நாளும் மாரியம்மனுக்கு அபிஷேகம்  அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று உபயதாரர் பழனி பெருநகராட்சி திமுக கவுன்சிலர் கே.சுரேஷ் சார்பில்,  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை பழனி ஸ்ரீ கந்த விலாஸ் அதிபர் என்.செல்வகுமார் தொடங்கி வைத்தார். இதில் நகர திமுக செயலாளர் வேலுமணி, சிவகிரிபட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் க.மாரியப்பன், நகர அதிமுக செயலாளர் முருகானந்தம், முன்னாள் நகர்மன்றத் துணைத் தலைவர் எம்.எஸ்.முகமதுஅலி, காணியாளர் பண்ணாடி ராஜா, காணியாளர் நரேந்திரன், வருத்தமில்லா வாலிபர் சங்க நிர்வாக தலைவர் எம்.முருகானந்தம், சி.வி.செல்வம்,  காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர்  சுந்தர், சங்கர் & கோ குமார், வழக்கறிஞர் மணிக்கண்ணன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ராமமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் துரைசெல்லபாண்டியன், ப.இ.தண்டபாணி, வி.ஏ.பி.குமார், பேச்சியம்மாள் ரைஸ் மில் அதிபர் சுப்ரமணி, ஐயப்பா மணி, மகாலிங்கம், ஆனந்தகுமார்,   பழனிச்சாமி,  கண்ணம்மாள் பழனிச்சாமி, திருக்கோவில் முன்னாள் பேஸ்கார் சந்திரசேகர், முன்னாள் சூப்பிரண்டு நெய்க்காரப்பட்டி முருகேசன், பொம்ம கடை மணி, ஹக்கிம் ராஜா,  சோலை தேவர், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தனபால், ராமச்சந்திரன், மணிமுத்து, உள்பட ஏராளமான பங்கேற்றனர்

Spread the love