August 7, 2026

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

ஆகஸ்ட்-7, 

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மத்திய மாவட்டம் வாலிபாளையம் பகுதி 34 வது வட்ட கழகம் சார்பில் பாளையக்காடு பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் பி ஆர் செந்தில்குமார்,34 வது வட்ட கழக செயலாளர் பி.ஆர் இளங்கோ, மற்றும் பகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Spread the love