February 27, 2026

பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழா 

திருத்தேரோட்டம் நடைபெற்றது

 பக்தர்கள் குவிந்தனர் 

பழனி பிப்ரவரி 26 

பழனி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி, நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. பழனியில் புகழ் பெற்றது மாரியம்மன் கோவில் ஆகும். இக்கோவில் பழனி முருகன் கோவிலின் உப கோவில் ஆகும். கோவிலில் மாசி திருவிழா கடந்த 6ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு தொடங்கியது. இத்திருவிழாவையொட்டி, வட்டார அளவில் ஏராளமான பக்தர்கள் தினமும் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனை தரிசித்து சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில், மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வீற்றிருக்க, திருத்தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் பொழுது, ஓம் சக்தி, பராசக்தி, என்ற பக்தி கோஷம் எழுப்பியபடி நான்கு ரத வீதிகளிலும் வடம் பிடித்து இழுத்து வந்தனர். இதில் கோவில் உதவி ஆணையர்கள் லட்சுமி, செந்தில் குமார், முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால், அதிமுக நகர செயலாளர் முருகானந்தம், காணியாளர் நரேந்திரன், பண்ணடி ராஜா, பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, அரிமா சுந்தரம், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், நகர் மன்ற கவுன்சிலர்கள் கே சுரேஷ்,  மகேஸ்வரி சக்திவேல், இந்திரா திருநாவுக்கரசு, காளீஸ்வரி பாஸ்கரன், பத்மினி முருகானந்தம், பிரவீன், இந்து வியாபாரிகள் சங்க ஜெகன், சோலை தேவர், முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர் 

Spread the love