போபால்: மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டம் டோரஹா கிராமத்தில் மதரசா பள்ளி உள்ளது. குடியரசு தினத்தன்று மாநில காவல் துறை ஏடிஜிபி (பயிற்சி) ராஜா பாபு சிங் அந்த மதரசா மாணவர்களிடையே காணொலி மூலம் உரையாற்றினார்.
இதுகுறித்து பிடிஐ செய்தியாளரிடம் சிங் கூறும்போது, ”டோரஹா கிராமத்தில் உள்ள மதரசாவின் மவுலானா எனது பழைய நண்பர். குடியரசு தினத்தன்று மாணவர்களிடையே உரையாற்றுமாறு அவர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
மாணவர்கள் பெற்று வரும் கல்விக்காக அவர்களுக்கு நான் வாழ்த்து கூறினேன். பகவத் கீதை பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்துக்கு அறிவொளி புகட்டி வருவதால், புனித குரானுடன் அதையும் படிக்குமாறு மாணவர்களிடம் கூறினேன்” என்றார்.

More Stories
கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு பணிக்கு சிட்கோ-மாநகராட்சி ஒப்பந்தம்
தமிழகத்தில் பிப்.10 வரை வறண்ட வானிலை; சில மாவட்டங்களில் பனிமூட்டம்