சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தமிழக முதல்வர் விஜய் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக நாளை டெல்லி செல்லவுள்ளார். நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேகேதாட்டு விவகாரம், சென்னை மெட்ரோ திட்டம், பிஎம்ஸ்ரீ கல்வி நிதி உள்ளிட்ட தமிழகம் தொடர்பான கோரிக்கைகளை முதல்வர் விஜய், பிரதமரிடம் வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டெல்லி பயணத்தின்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பயணத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தியையும் முதல்வர் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் திறந்து வைக்கிறார்.
நாளை காலை சென்னையில் இருந்து முதல்வர் விஜய் டெல்லி செல்ல உள்ளார். முதல்வர் விஜய்யின் டெல்லி பயண ஏற்பாடுகளை உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், கவனித்து வருகின்றனர்.

More Stories
“விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி விஞ்ஞான ஏமாற்று வேலை” – இபிஎஸ் குற்றச்சாட்டு
மகளிர் உரிமை தொகை: புதிய விண்ணப்பங்கள் பெறுவது எப்போது?
தமிழகத்தில் நாளை (27-5-2026) முழு நேர மின்தடை அறிவிப்பு! ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!