ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் வறட்சி மற்றும் பருவமழை மாற்றத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருவதாகவும், வங்கி ஊழியர்கள் நிலத்தை ஜப்தி செய்வோம் என மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கூட்டுறவு பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் மற்றும் வசூல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்குப் பின் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு