March 8, 2026

வருகின்ற 11.03.2026 அன்று காலை 10.00 மணி அளவில் தலைமைச் செயலகம் முன்பு கருப்பு கொடியுடன் காத்திருப்பு போராட்டம்..

நாமக்கல் மாவட்டம், மோகலூர் வட்டம், பெரமாண்டம்பாளையம் கிராமம், சர்வே எண். 326/6A1, SAI-ல் சட்ட விரோதமாக கோழிப்பண்ணை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திற்கு கடந்த ஐந்து மாதங்களாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை. எனவே சட்டவிரோதமாக மக்கள் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகிலேயே கோழிப்பண்ணை அமைப்பதற்கு தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தலைமை செயலகம் முன்பு வருகின்ற 11.03.2026 10.00 மணி அளவில் கருப்பு கொடியுடன் காத்திருப்பு போராட்டம் இளம் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நடத்த உள்ளோம் என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்து அறிக்கை.

Spread the love