அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி தொடர்பாக…
அமைச்சர் துரைமுருகன்கோப்புப்படம்
சென்னை: அமைச்சர் துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர்களில் அதிக அரசியல் அனுபவம் கொண்டவராகவும், எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு நகைச்சுவையாகவும் அதேவேளையில் அதிரடியாக பதிலடி கொடுப்பதில் மூத்தவரும் திமுக பொதுச்செயலாளருமான அமைச்சர் துரைமுருகன்(87), வயது மூப்பு காரணமாக அவருக்கு அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்காகத் தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் துரைமுருகன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கால் வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் உடனடியாக தீவிர சிகிச்சை அளித்தனர்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர், கால் வலி நிவாரண மருத்துகள் பரிந்துரைக்கப்பட்டு, அடுத்த சில நாள்களுக்கு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் அவர், இரண்டு நாள்களில் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

More Stories
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலகப் புகழ்பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் 852வது ஆண்டு சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
பழனி முருகன் மலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வந்திருந்தனர்
பழனியில் ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அருகினில் கோயில் நிர்வாகி காணியாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் பக்தர்கள் உள்ளனர்