August 8, 2026

இராசிபுரம்:நன்றி மறக்க மாட்டோம்: உங்களுக்கே எங்கள் ஓட்டு… உழவர் சந்தையில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட மதிவேந்தனுக்கு மக்கள் கொடுத்த மகிழ்ச்சி செய்தி…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சரும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரான மருத்துவர் மா.மதிவேந்திரன் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தை பகுதியில் அதிகாலை வாக்கு சேகரித்தார், அப்பொழுது அங்குள்ள விவசாயிகள் மதிவேந்தனிடம் உதயசூரியனுக்கு தான் வாக்களிப்போம் என்ற உறுதியளித்ததுடன் , அடையாளம் இல்லாமல் இருந்த எங்களுக்கு உழவர் சந்தை ஏற்படுத்திக் கொடுத்து எங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தவர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று கூறினார்கள்…

தொடர்ந்து உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்களுடன் செல்பி எடுத்து உற்சாகப்படுத்தினார் .

Spread the love